குறள் எண் : 1200 உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக. சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு... Read more
குறள் எண் : 1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட் டிசையும் இனிய செவிக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம்... Read more
குறள் எண் : 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை. சாலமன் பாப்பையா உரை: தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப்... Read more
குறள் எண் : 1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ? சாலமன் பாப்பையா உரை: ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும்... Read more
குறள் எண் : 1196 ஒருதலையான் இன்னாது காமங்காப் போல இருதலை யானும் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும். சாலமன் பாப்பையா உரை: ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது... Read more
குறள் எண் : 1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்? சாலமன் பாப்பையா உரை: நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத்... Read more
குறள் எண் : 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர். சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே. கலைஞர் மு.கருணாநிதி... Read more
குறள் எண் : 1193 வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே வாழுநம் என்னும் செருக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும். சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார்... Read more
குறள் எண் : 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும்... Read more
குறள் எண் : 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார். சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும்... Read more