குறள் எண் : 820 எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்து பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நம் வீட்டுக்குள் வந்து நட்புக் கொண்டாடிப் பலர்... Read more
குறள் எண் : 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும். சாலமன் பாப்பையா உரை: சொல் ஒன்று, செயல் வேறாக இருப்பவரின் நட்பு கனவிலும் கூடத் துன்பமானதாகும். கலைஞர்... Read more
குறள் எண் : 818 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச்... Read more
குறள் எண் : 817 நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும். சாலமன் பாப்பையா உரை: சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக்... Read more
குறள் எண் : 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும். சாலமன் பாப்பையா உரை: அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம். கலைஞர்... Read more
குறள் எண் : 815 செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும். சாலமன் பாப்பையா உரை: நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின்... Read more
குறள் எண் : 814 அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது. சாலமன் பாப்பையா உரை: போர்க்களத்தே நம்மை வீழ்த்திவிட்டுப் போய்விடும் கல்வியற்ற குதிரையைப்... Read more
குறள் எண் : 813 உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர். சாலமன் பாப்பையா உரை: இவரிடம் நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று... Read more
குறள் எண் : 812 உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன். சாலமன் பாப்பையா உரை: தமக்குப் பயனிருந்தால் நட்புக் கொண்டும்,... Read more
குறள் எண் : 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது. சாலமன் பாப்பையா உரை: உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு... Read more