திருக்குறள்- குறள் 1330

குறள் எண் : 1330 ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும். சாலமன் பாப்பையா உரை: காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து... Read more

திருக்குறள்- குறள் 1329

குறள் எண் : 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக. சாலமன் பாப்பையா உரை: ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக... Read more

திருக்குறள்- குறள் 1328

குறள் எண் : 1328 ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ. சாலமன் பாப்பையா உரை: நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா? கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 1327

குறள் எண் : 1327 ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும். சாலமன் பாப்பையா உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில்... Read more

திருக்குறள்- குறள் 1326

குறள் எண் : 1326 உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது. சாலமன் பாப்பையா உரை: உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு... Read more

திருக்குறள்- குறள் 1325

குறள் எண் : 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது. சாலமன் பாப்பையா உரை: ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு... Read more

திருக்குறள்- குறள் 1324

குறள் எண் : 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. சாலமன் பாப்பையா உரை: என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும்... Read more

திருக்குறள்- குறள் 1323

குறள் எண் : 1323 புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ. சாலமன் பாப்பையா உரை: நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப்... Read more

திருக்குறள்- குறள் 1322

குறள் எண் : 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். சாலமன் பாப்பையா உரை: ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும்... Read more

திருக்குறள்- குறள் 1321

குறள் எண் : 1321 இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல் வல்ல தவரளிக்கும் ஆறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. சாலமன் பாப்பையா உரை: அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி... Read more