திருக்குறள்- குறள் 1190

குறள் எண் : 1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே. சாலமன் பாப்பையா உரை: என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை... Read more

திருக்குறள்- குறள் 1189

குறள் எண் : 1189 பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக. சாலமன் பாப்பையா உரை: இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால்,... Read more

திருக்குறள்- குறள் 1188

குறள் எண் : 1188 பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே! சாலமன் பாப்பையா உரை: இங்கோ இவள் பசலை உற்றாள் என்று... Read more

திருக்குறள்- குறள் 1187

குறள் எண் : 1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே! சாலமன் பாப்பையா உரை: முன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்;... Read more

திருக்குறள்- குறள் 1186

குறள் எண் : 1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது. சாலமன் பாப்பையா உரை: விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த... Read more

திருக்குறள்- குறள் 1185

குறள் எண் : 1185 உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது. சாலமன் பாப்பையா உரை: முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம்... Read more

திருக்குறள்- குறள் 1184

குறள் எண் : 1184 உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ? சாலமன் பாப்பையா உரை: நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப்... Read more

திருக்குறள்- குறள் 1183

குறள் எண் : 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக்... Read more

திருக்குறள்- குறள் 1182

குறள் எண் : 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது. சாலமன் பாப்பையா உரை: இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என்... Read more

திருக்குறள்- குறள் 1181

குறள் எண் : 1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்? சாலமன் பாப்பையா உரை: என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத்... Read more