திருக்குறள்- குறள் 590

குறள் எண் : 590 சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற் புறப்படுத்தான் ஆகும் மறை குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்…. சாலமன் பாப்பையா உரை: மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து சொல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும்... Read more

திருக்குறள்- குறள் 589

குறள் எண் : 589 ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்….. சாலமன் பாப்பையா உரை: ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர்... Read more

திருக்குறள்- குறள் 588

குறள் எண் : 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்….. சாலமன் பாப்பையா உரை: ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை... Read more

திருக்குறள்- குறள் 587

குறள் எண் : 587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பா டில்லதே ஒற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்….. சாலமன் பாப்பையா உரை: ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய்,... Read more

திருக்குறள்- குறள் 586

குறள் எண் : 586 துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந் தென்செயினுஞ் சோர்வில தொற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்….. சாலமன் பாப்பையா உரை: செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய... Read more

திருக்குறள்- குறள் 585

குறள் எண் : 585 கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஐயுற முடியாத ருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்….. சாலமன் பாப்பையா உரை: பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று,... Read more

திருக்குறள்- குறள் 584

குறள் எண் : 584 வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதிர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல்,... Read more

திருக்குறள்- குறள் 583

குறள் எண் : 583 ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்த தில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி,... Read more

திருக்குறள்- குறள் 582

குறள் எண் : 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்…. சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள... Read more

திருக்குறள்- குறள் 581

குறள் எண் : 581 ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்…. சாலமன் பாப்பையா உரை: ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதிநூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.... Read more