திருக்குறள்- குறள் 980

குறள் எண் : 980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும். சாலமன் பாப்பையா உரை: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர்... Read more

திருக்குறள்- குறள் 979

குறள் எண் : 979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும். சாலமன் பாப்பையா உரை: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே... Read more

திருக்குறள்- குறள் 978

குறள் எண் : 978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும். சாலமன் பாப்பையா உரை: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத்... Read more

திருக்குறள்- குறள் 977

குறள் எண் : 977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான் சீரல் லவர்கண் படின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள்... Read more

திருக்குறள்- குறள் 976

குறள் எண் : 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை. சாலமன் பாப்பையா உரை: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள்... Read more

திருக்குறள்- குறள் 975

குறள் எண் : 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை யுடைய செயல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில்... Read more

திருக்குறள்- குறள் 974

குறள் எண் : 974 ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும். சாலமன் பாப்பையா உரை: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப்... Read more

திருக்குறள்- குறள் 973

குறள் எண் : 973 மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர். சாலமன் பாப்பையா உரை: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில்... Read more

திருக்குறள்- குறள் 972

குறள் எண் : 972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. சாலமன் பாப்பையா உரை: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே... Read more

திருக்குறள்- குறள் 971

குறள் எண் : 971 ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற் கஃதிறந்து வாழ்தும் எனல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம். சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன... Read more