திருக்குறள்- குறள் 351

4 / 100

குறள் எண் : 351

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்….

சாலமன் பாப்பையா உரை:

பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *