திருக்குறள்- குறள் 110

குறள் எண் : 110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை…. சாலமன் பாப்பையா உரை: எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு.... Read more

திருக்குறள்- குறள் 109

குறள் எண் : 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன் றுள்ளக் கெடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்…. சாலமன் பாப்பையா உரை: முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக்... Read more

திருக்குறள்- குறள் 108

குறள் எண் : 108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த... Read more

திருக்குறள்- குறள் 106

குறள் எண் : 106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது…. சாலமன் பாப்பையா உரை: உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின்... Read more

திருக்குறள்- குறள் 105

குறள் எண் : 105 உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்…. சாலமன் பாப்பையா உரை: ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது,... Read more

திருக்குறள்- குறள் 104

குறள் எண் : 104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்…. சாலமன் பாப்பையா உரை: தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர்... Read more

திருக்குறள்- குறள் 103

குறள் எண் : 103 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்…. சாலமன் பாப்பையா உரை: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர்... Read more

திருக்குறள்- குறள் 102

குறள் எண் : 102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்…. சாலமன் பாப்பையா உரை: நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும்,... Read more

திருக்குறள்- குறள் 101

குறள் எண் : 101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது…. சாலமன் பாப்பையா உரை: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும்,... Read more