திருக்குறள்- குறள் 104

குறள் எண் : 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்….

சாலமன் பாப்பையா உரை:

தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒருவர் செய்யும் தினையளவு அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *