திருக்குறள்- குறள் 280

குறள் எண் : 280 மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா…. சாலமன் பாப்பையா உரை: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி... Read more

திருக்குறள்- குறள் 279

குறள் எண் : 279 கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை வினைபடு பாலாற் கொளல் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்…. சாலமன் பாப்பையா உரை: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது... Read more

திருக்குறள்- குறள் 278

குறள் எண் : 278 மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்…. சாலமன் பாப்பையா உரை: மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து... Read more

திருக்குறள்- குறள் 277

குறள் எண் : 277 புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புறத்தில் குன்றிமணிப்போல் செம்மையானவராய் காணப்பட்டாராயினும் அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உணடு…. சாலமன் பாப்பையா உரை: குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும்... Read more

திருக்குறள்- குறள் 276

குறள் எண் : 276 நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை…. சாலமன் பாப்பையா உரை: மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும்... Read more

திருக்குறள்- குறள் 275

குறள் எண் : 275 பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்…. சாலமன் பாப்பையா உரை: எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால்... Read more

திருக்குறள்- குறள் 274

குறள் எண் : 274 தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை... Read more

திருக்குறள்- குறள் 273

குறள் எண் : 273 வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது…. சாலமன் பாப்பையா உரை: கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப்... Read more

திருக்குறள்- குறள் 272

குறள் எண் : 272 வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால் வானத்தைப் போல் உயர்ந்துள்ள தவக்கோலம் ஒருவனுக்கு என்ன பயன் செய்யும்…. சாலமன் பாப்பையா உரை: தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால்... Read more

திருக்குறள்- குறள் 271

குறள் எண் : 271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்…. சாலமன் பாப்பையா உரை: வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம்,... Read more