திருக்குறள்- குறள் 1160

குறள் எண் : 1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,( பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர். சாலமன் பாப்பையா உரை: சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத்... Read more

திருக்குறள்- குறள் 1159

குறள் எண் : 1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ. சாலமன் பாப்பையா உரை: தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்; காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும்... Read more

திருக்குறள்- குறள் 1158

குறள் எண் : 1158 இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும் இன்னா தினியார்ப் பிரிவு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது. சாலமன் பாப்பையா உரை: உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது... Read more

திருக்குறள்- குறள் 1157

குறள் எண் : 1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன்... Read more

திருக்குறள்- குறள் 1156

குறள் எண் : 1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது. சாலமன் பாப்பையா உரை: நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம்... Read more

திருக்குறள்- குறள் 1155

குறள் எண் : 1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது. சாலமன் பாப்பையா உரை: என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர்,... Read more

திருக்குறள்- குறள் 1154

குறள் எண் : 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க் குண்டோ தவறு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ. சாலமன் பாப்பையா உரை: என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே,... Read more

திருக்குறள்- குறள் 1153

குறள் எண் : 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது. சாலமன் பாப்பையா உரை: எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம்... Read more

திருக்குறள்- குறள் 1152

குறள் எண் : 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. சாலமன் பாப்பையா உரை: அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார்... Read more

திருக்குறள்- குறள் 1151

குறள் எண் : 1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல். சாலமன் பாப்பையா உரை: என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன்... Read more