திருக்குறள்- குறள் 1153

8 / 100

குறள் எண் : 1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

சாலமன் பாப்பையா உரை:

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; “பிரிந்திடேன்” என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *