திருக்குறள்- குறள் 1320

குறள் எண் : 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: என் பேச்சிலும், செயலிலும் அவள் கோபம் கொள்வதால், பேசாமல்,... Read more

திருக்குறள்- குறள் 1319

குறள் எண் : 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும். நீர் மற்ற மகளிர்க்கும்... Read more

திருக்குறள்- குறள் 1318

குறள் எண் : 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல் எம்மை மறைத்திரோ என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள். சாலமன் பாப்பையா உரை: அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்;... Read more

திருக்குறள்- குறள் 1317

குறள் எண் : 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்? சாலமன் பாப்பையா உரை: நான் தும்ம, அவள் இயல்பாகவே வாழ்த்தினாள்; அப்படி வாழ்த்தியவளே... Read more

திருக்குறள்- குறள் 1316

குறள் எண் : 1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். சாலமன் பாப்பையா உரை: எப்போதும் உன்னைத்தான் எண்ணினேன் என்றேன். சில சமயம் மறந்து ஒரு... Read more

திருக்குறள்- குறள் 1315

குறள் எண் : 1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதல் மிகுதியில் இந்தப் பிறவியில் நான் உன்னைப்... Read more

திருக்குறள்- குறள் 1314

குறள் எண் : 1314 யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள். சாலமன் பாப்பையா உரை: காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல்... Read more

திருக்குறள்- குறள் 1313

குறள் எண் : 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். சாலமன் பாப்பையா உரை: ஒரு மாற்றம் கருதி, ஒருமுறை, மரத்திலே மலர்ந்த பூவை மாலையாக்கிச்... Read more

திருக்குறள்- குறள் 1312

குறள் எண் : 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். சாலமன் பாப்பையா உரை: நான் அவரோடு ஊடிப் பேசாமல் இருந்தேன்; நீடு வாழ்க,... Read more

திருக்குறள்- குறள் 1311

குறள் எண் : 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். சாலமன் பாப்பையா உரை: பெண் விரும்பியே! நீ வீதி வழி வரும்... Read more