திருக்குறள்- குறள் 1240

குறள் எண் : 1240 கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது. சாலமன் பாப்பையா உரை: குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது.... Read more

திருக்குறள்- குறள் 1239

குறள் எண் : 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன. சாலமன் பாப்பையா உரை: (அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த... Read more

திருக்குறள்- குறள் 1238

குறள் எண் : 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தழுவிய கை‌களைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. சாலமன் பாப்பையா உரை: முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு... Read more

திருக்குறள்- குறள் 1237

குறள் எண் : 1237 பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ? சாலமன் பாப்பையா உரை: நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள... Read more

திருக்குறள்- குறள் 1236

குறள் எண் : 1236 தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக் கொடியார் எனக்கூறல் நொந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். சாலமன் பாப்பையா உரை: வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக்... Read more

திருக்குறள்- குறள் 1235

குறள் எண் : 1235 கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. சாலமன் பாப்பையா உரை: வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என்... Read more

திருக்குறள்- குறள் 1234

குறள் எண் : 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த... Read more

திருக்குறள்- குறள் 1233

குறள் எண் : 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன. சாலமன் பாப்பையா உரை: அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று... Read more

திருக்குறள்- குறள் 1232

குறள் எண் : 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன. சாலமன் பாப்பையா உரை: பசந்து, நீர் சிந்தும் கண்கள்,... Read more

திருக்குறள்- குறள் 1231

குறள் எண் : 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன. சாலமன் பாப்பையா உரை: பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப்... Read more