திருக்குறள்- குறள் 1080

குறள் எண் : 1080 எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால் விற்றற் குரியர் விரைந்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை... Read more

திருக்குறள்- குறள் 1079

குறள் எண் : 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான். சாலமன் பாப்பையா உரை: பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம்... Read more

திருக்குறள்- குறள் 1078

குறள் எண் : 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல கொல்லப் பயன்படும் கீழ். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர். சாலமன் பாப்பையா உரை: இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ... Read more

திருக்குறள்- குறள் 1077

குறள் எண் : 1077 ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையர் அல்லா தவர்க்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார். சாலமன் பாப்பையா உரை: தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம்... Read more

திருக்குறள்- குறள் 1076

குறள் எண் : 1076 அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க் குய்த்துரைக்க லான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர். சாலமன் பாப்பையா உரை: தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.... Read more

திருக்குறள்- குறள் 1075

குறள் எண் : 1075 அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும். சாலமன் பாப்பையா உரை: கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும்... Read more

திருக்குறள்- குறள் 1074

குறள் எண் : 1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர். சாலமன் பாப்பையா உரை: தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால்... Read more

திருக்குறள்- குறள் 1073

குறள் எண் : 1073 தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். சாலமன் பாப்பையா உரை: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர்... Read more

திருக்குறள்- குறள் 1072

குறள் எண் : 1072 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர். சாலமன் பாப்பையா உரை: நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம்... Read more

திருக்குறள்- குறள் 1071

குறள் எண் : 1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.2 சாலமன் பாப்பையா உரை: கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை... Read more