திருக்குறள்- குறள் 1073

8 / 100

குறள் எண் : 1073

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *