திருக்குறள்- குறள் 500

குறள் எண் : 500 காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்…. சாலமன் பாப்பையா உரை: பாகனுக்கு அடங்காததும், தன்னை எதிர்த்துப் பிடித்த வீரனைத் தன்... Read more

திருக்குறள்- குறள் 499

குறள் எண் : 499 சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோ டொட்ட லரிது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது…. சாலமன் பாப்பையா உரை: மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே... Read more

திருக்குறள்- குறள் 498

குறள் எண் : 498 சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்…. சாலமன் பாப்பையா உரை: பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும்... Read more

திருக்குறள்- குறள் 497

குறள் எண் : 497 அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி யிடத்தாற் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: (செய்யும் வழிவகைகமைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை…. சாலமன் பாப்பையா உரை: செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத... Read more

திருக்குறள்- குறள் 496

குறள் எண் : 496 கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது…. சாலமன் பாப்பையா உரை: வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில்... Read more

திருக்குறள்- குறள் 495

குறள் எண் : 495 நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்…. சாலமன் பாப்பையா உரை: முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை... Read more

திருக்குறள்- குறள் 494

குறள் எண் : 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்…. சாலமன் பாப்பையா உரை: ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை... Read more

திருக்குறள்- குறள் 493

குறள் எண் : 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,… சாலமன் பாப்பையா உரை: பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து,... Read more

திருக்குறள்- குறள் 492

குறள் எண் : 492 முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும் குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்….. சாலமன் பாப்பையா உரை: பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல... Read more

திருக்குறள்- குறள் 491

குறள் எண் : 491 தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது…. சாலமன் பாப்பையா உரை: பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா;... Read more