திருக்குறள்- குறள் 1060

குறள் எண் : 1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும். சாலமன் பாப்பையா உரை: பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது; வேண்டும்பொழுது பொருள் கிடைக்காது... Read more

திருக்குறள்- குறள் 1059

குறள் எண் : 1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும். சாலமன் பாப்பையா உரை: தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம்... Read more

திருக்குறள்- குறள் 1058

குறள் எண் : 1058 இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும். சாலமன் பாப்பையா உரை: பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய... Read more

திருக்குறள்- குறள் 1057

குறள் எண் : 1057 இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும். சாலமன் பாப்பையா உரை: அவமதிக்காமல், இழிவாகப் பேசாமல் எடுத்துக் கொடுப்பவரைக் கண்டால், பிச்சை கேட்பவரின் மனம் மகிழ்ந்து... Read more

திருக்குறள்- குறள் 1056

குறள் எண் : 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும். சாலமன் பாப்பையா உரை: இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.... Read more

திருக்குறள்- குறள் 1055

குறள் எண் : 1055 கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான். சாலமன் பாப்பையா உரை: கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால்... Read more

திருக்குறள்- குறள் 1054

குறள் எண் : 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது. சாலமன் பாப்பையா உரை: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று, ஒன்றைக் கேட்பதும், பிறர்க்குக்... Read more

திருக்குறள்- குறள் 1053

குறள் எண் : 1053 கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர்... Read more

திருக்குறள்- குறள் 1052

குறள் எண் : 1052 இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.... Read more

திருக்குறள்- குறள் 1051

குறள் எண் : 1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று. சாலமன் பாப்பையா உரை: ஏதும்‌ இல்லா நிலையில், எவரிடம் ஏற்பது... Read more