திருக்குறள்- குறள் 970

குறள் எண் : 970 இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழு தேத்தும் உலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி நிற்பார்கள். சாலமன் பாப்பையா உரை: தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப்... Read more

திருக்குறள்- குறள் 969

குறள் எண் : 969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர். சாலமன் பாப்பையா உரை: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப்... Read more

திருக்குறள்- குறள் 968

குறள் எண் : 968 மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ. சாலமன் பாப்பையா உரை: குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த... Read more

திருக்குறள்- குறள் 967

குறள் எண் : 967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது. சாலமன் பாப்பையா உரை: இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று... Read more

திருக்குறள்- குறள் 966

குறள் எண் : 966 புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற் றிகழ்வார்பின் சென்று நிலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன. சாலமன் பாப்பையா உரை: உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர்... Read more

திருக்குறள்- குறள் 965

குறள் எண் : 965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு... Read more

திருக்குறள்- குறள் 964

குறள் எண் : 964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத்... Read more

திருக்குறள்- குறள் 963

குறள் எண் : 963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த... Read more

திருக்குறள்- குறள் 962

குறள் எண் : 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார். சாலமன் பாப்பையா உரை: புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு... Read more

திருக்குறள்- குறள் 961

குறள் எண் : 961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும்... Read more