திருக்குறள்- குறள் 1040

குறள் எண் : 1040 இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள். சாலமன் பாப்பையா உரை: நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி... Read more

திருக்குறள்- குறள் 1039

குறள் எண் : 1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந் தில்லாளின் ஊடி விடும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும். சாலமன் பாப்பையா உரை: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச்... Read more

திருக்குறள்- குறள் 1038

குறள் எண் : 1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது. சாலமன் பாப்பையா உரை: உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது;... Read more

திருக்குறள்- குறள் 1037

குறள் எண் : 1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும். சாலமன் பாப்பையா உரை: உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம்... Read more

திருக்குறள்- குறள் 1036

குறள் எண் : 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கும் நிலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை. சாலமன் பாப்பையா உரை: உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும்... Read more

திருக்குறள்- குறள் 1035

குறள் எண் : 1035 இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார். சாலமன் பாப்பையா உரை: தம் கையால் உழுது உண்ணும் இயல்பை... Read more

திருக்குறள்- குறள் 1034

குறள் எண் : 1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள்,... Read more

திருக்குறள்- குறள் 1033

குறள் எண் : 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே. சாலமன் பாப்பையா உரை: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர்... Read more

திருக்குறள்- குறள் 1032

குறள் எண் : 1032 உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை எல்லாம் பொறுத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர். சாலமன் பாப்பையா உரை: உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே... Read more

திருக்குறள்- குறள் 1031

குறள் எண் : 1031 சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. சாலமன் பாப்பையா உரை: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு... Read more