திருக்குறள்- குறள் 880

குறள் எண் : 880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர். சாலமன் பாப்பையா உரை: நம்மைப் பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்திற்குள் பகைவரால்... Read more

திருக்குறள்- குறள் 879

குறள் எண் : 879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். சாலமன் பாப்பையா உரை: நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே... Read more

திருக்குறள்- குறள் 878

குறள் எண் : 878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும். சாலமன் பாப்பையா உரை: ஒரு செ‌யலைச் செய்ய வேண்டிய முறையை அறிந்து, நம்மைப் பலப்படுத்துவதுடன்... Read more

திருக்குறள்- குறள் 877

குறள் எண் : 877 நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது. சாலமன் பாப்பையா உரை: நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக்... Read more

திருக்குறள்- குறள் 876

குறள் எண் : 876 தேறினுந் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனது பகையை முன்பே தெரிந்தோ தெரியாமலோ இருந்தாலும், நெருக்கடி... Read more

திருக்குறள்- குறள் 875

குறள் எண் : 875 தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன் இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப்... Read more

திருக்குறள்- குறள் 874

குறள் எண் : 874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும். சாலமன் பாப்பையா உரை: பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும். கலைஞர்... Read more

திருக்குறள்- குறள் 873

குறள் எண் : 873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான். சாலமன் பாப்பையா உரை: தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.... Read more

திருக்குறள்- குறள் 872

குறள் எண் : 872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது. சாலமன் பாப்பையா உரை: விலலை ஆயுதமாகக் கொண்ட வீரரோடு பகை கொண்டாலும்,... Read more

திருக்குறள்- குறள் 871

குறள் எண் : 871 பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. குறள் விளக்கம் மு.வரதராசனார் உரை: பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது. சாலமன் பாப்பையா உரை: பகை எனப்படும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிலும் கூட் விரும்பத்தக்கது அன்று. கலைஞர் மு.கருணாநிதி... Read more