திருக்குறள்- குறள் 1041

8 / 100

குறள் எண் : 1041

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *