திருக்குறள்- குறள் 1204

8 / 100

குறள் எண் : 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

சாலமன் பாப்பையா உரை:

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *