திருக்குறள்- குறள் 1226

11 / 100

குறள் எண் : 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

சாலமன் பாப்பையா உரை:

முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *