திருக்குறள்- குறள் 1249

11 / 100

குறள் எண் : 1249

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

சாலமன் பாப்பையா உரை:

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *