திருக்குறள்- குறள் 1289

11 / 100

குறள் எண் : 1289

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை:

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *