திருக்குறள்- குறள் 196

4 / 100

குறள் எண் : 196

பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *