திருக்குறள்- குறள் 202

4 / 100

குறள் எண் : 202

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்….

சாலமன் பாப்பையா உரை:

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *