திருக்குறள்- குறள் 215

4 / 100

குறள் எண் : 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது….

சாலமன் பாப்பையா உரை:

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *