திருக்குறள்- குறள் 227

4 / 100

குறள் எண் : 227

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *