திருக்குறள்- குறள் 287

4 / 100

குறள் எண் : 287

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *