திருக்குறள்- குறள் 291

4 / 100

குறள் எண் : 1

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்….

சாலமன் பாப்பையா உரை:

உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *