திருக்குறள்- குறள் 295

4 / 100

குறள் எண் : 295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்….

சாலமன் பாப்பையா உரை:

உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *