திருக்குறள்- குறள் 304

4 / 100

குறள் எண் : 304

நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?…

சாலமன் பாப்பையா உரை:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *