திருக்குறள்- குறள் 308

4 / 100

குறள் எண் : 308

இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது….

சாலமன் பாப்பையா உரை:

பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *