திருக்குறள்- குறள் 33

குறள் எண் : 33

ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்….

சாலமன் பாப்பையா உரை:

இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *