திருக்குறள்- குறள் 336

4 / 100

குறள் எண் : 336

நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்….

சாலமன் பாப்பையா உரை:

நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *