திருக்குறள்- குறள் 338

4 / 100

குறள் எண் : 338

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது….

சாலமன் பாப்பையா உரை:

உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *