திருக்குறள்- குறள் 339

4 / 100

குறள் எண் : 339

உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது….

சாலமன் பாப்பையா உரை:

உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *