திருக்குறள்- குறள் 340

4 / 100

குறள் எண் : 340

புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ….

சாலமன் பாப்பையா உரை:

உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *