திருக்குறள்- குறள் 364

4 / 100

குறள் எண் : 364

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்….

சாலமன் பாப்பையா உரை:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *