திருக்குறள்- குறள் 374

4 / 100

குறள் எண் : 374

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு….

சாலமன் பாப்பையா உரை:

உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *