திருக்குறள்- குறள் 388

4 / 100

குறள் எண் : 388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்….

சாலமன் பாப்பையா உரை:

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *