திருக்குறள்- குறள் 40

குறள் எண் : 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *