திருக்குறள்- குறள் 426

4 / 100

குறள் எண் : 426

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்….

சாலமன் பாப்பையா உரை:

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *