திருக்குறள்- குறள் 427

4 / 100

குறள் எண் : 427

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்….

சாலமன் பாப்பையா உரை:

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *