திருக்குறள்- குறள் 447

4 / 100

குறள் எண் : 447

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்….

சாலமன் பாப்பையா உரை:

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *