திருக்குறள்- குறள் 449

4 / 100

குறள் எண் : 449

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
  சார்பிலார்க் கில்லை நிலை

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை….

சாலமன் பாப்பையா உரை:

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *