திருக்குறள்- குறள் 459

4 / 100

குறள் எண் : 459

மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தி னேமாப் புடைத்து

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்….

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *