திருக்குறள்- குறள் 468

4 / 100

குறள் எண் : 468

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்

குறள் விளக்கம்

மு.வரதராசனார் உரை:

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்….

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *